கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

240 0

தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் கடந்த 17ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர், யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவருக்கு விளக்கமறியல் தண்டனை விதிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் 21 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.