டெங்கு மற்றுமொரு கர்பிணி பலி – திருகோணமலையில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

248 0

திருகோணமலை பள்ளத்தோட்டத்தில் டெங்கு நோய்க்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதான கர்ப்பிணித் தாய் ஒருவரே இவ்வாறு பலியானதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் திருகோணமலையில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு தொற்றினால் திருகோணமலை பொது மருத்துவமனையில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், டெங்கு தெற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை மருத்துவமனையில் மாத்திரம் சுமார் ஆயிரத்து 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 35 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.