பிரச்சினை தீர்வு, அமைச்சர் கிரியெல்ல எழுத்து மூல அறிவிப்பு

229 0

மருத்துவ சபையினால் நடாத்தப்படும் பரீட்சைக்கு முகம்கொடுக்க மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயார் என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மருத்துவ சபையிடம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ சபையின் நியாயங்களுக்கு ஏற்ப நடாத்தப்படும் பரீட்சைக்கு மாணவர்கள் முகம்கொடுப்பதன் ஊடாக, நாட்டில் எழுந்துள்ள சைட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அக்கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சபையில் சைட்டம் மாணவர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை இதன்போது, சரியாக நிறைவேற்ற முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாணவர்களின் தரம் குறித்து எழும் பிரச்சினைக்கும், மருத்துவ சபையினால் நடாத்தப்படும் பரீட்சையில் தேற வேண்டும் என்பது தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.