கஞ்சா பயிரிட்டவர் துப்பாக்கி ஐந்துடன் கைது

236 0

கட்டுத் துப்பாக்கிகள் ஐந்துடன், கஞ்சா பயிர் நிலமொன்றை நடாத்திய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கெகிராவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெக்கிராவைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேனைப் பயிர்ச் செய்கை நடாத்தும் போர்வையில் இவர் கஞ்சா பயிர்நிலமொன்றை நடாத்தி வந்துள்ளார். சந்தேக நபர் இன்று (19) கெகிராவ மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.