அரநாயக்கவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

240 0

அரநாயக்க கல்பொக்க பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில், இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமைகயம் குறிப்பிட்டுள்ளனர்.

அரநாயக்க ஹொர்வலவில் வசிக்கும் 60 வயது பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.