இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லையாம்- சட்டத்தரணி டெஸ்மன் சில்வா

227 0

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணி டெஸ்மன் சில்வா தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சட்டத்தரணிகள் ஐவர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட 7 அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான தகவல்களை வைத்து வெளிநாட்டு நீதிபதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஏழு அறிக்கைகளும் ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில், பிரித்தானியாவின் யுத்தம் தொடர்பான நிபுணர் மேஜர் ஜெனரல் ஜோன் ஹொல்மஸ்த் வழங்கிய தகவல்களும் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அறிக்கையின் மூலம், இலங்கை இராணுவம் வன்னி இறுதி யுத்தத்தின் போது சர்வதேச யுத்த சட்ட விதிமுறைகளை மீறவில்லையென்பது தெளிவாவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.