டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

209 0

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

இந்தவகையில், சப்ரகமுவ, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பரில் நடாத்த அரசாங்கம் தயாராகிவருவதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த பின்னர், தேர்தலை நடாத்தாமல் மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை நீடிப்பதாயின், அதற்கு பாராளுமன்றத்தில் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மாகாண சபைக்கான ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.