உள்நாட்டில் 2020 இற்கு முன்னர் இயற்கை வாயு

226 0

இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இயற்கை வாயுவை தயாரிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மன்னாரை அண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெற்றோல் அகழ்வுக்கான ஆய்வு நடவடிக்கைகளுக்கு புதிய ஒப்பந்தக் காரர்களை இணைத்துக் கொள்வதற்கான விலை மனுக் கோரல் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் கிடைக்கும் என்பதில் எழுபது சதவீத நம்பிக்கை உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.