ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஷாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

