வடமாகாணத்தை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமான முடிவுளை எடுக்கும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு கண்டனத்திற்குரியது என்று வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற 57 ஆவது அமர்வின் போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்படி விடையம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நேற்றைய தினம் எமது பிரதம செயலாளர் ஒருமுக்கியமானவிடயமொன்றை எனதுகவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
அதாவது 05.07.2016ந் திகதிய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுடீன், பயிசர் முஸ்தாபா, டி.எம்.சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வடமாகாணபிரதம செயலாளரும் வடமேல் மாகாணபிரதம செயலாளரும் அங்கம் வகிக்கவேண்டும் என்றும் முடிவுஎடுத்துள்ளதாகக் கூறினார்.
மேலும் மீள்குடியேற்றம் பற்றியநிகழ்ச்சிநிரலில் பாரம் பரியசிங்களகிராமங்களும் உள்ளடக்கவேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சேயலணி அந்தந்த மாவட்டச் செயலர்களை உள்ளேற்க அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் செயலணி எடுக்கும் தீர்மானம் காலத்திற்குக் காலம் அமைச்சர் வாரியக் கருத்தொருமிப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை எனக்கு எடுத்துக் காட்டி இச் செயலணியில் வடமாகாண அரசியல் அலகுவிடுபட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் முன்னைய ஆளுநர் பள்ளிகக்கார இருந்தபோது மாவட்டரீதியாக செயலணி இருக்க வேண்டும் என்றும் சகல அரசியல் கட்சிகளும் அதில் அங்கம் வகிக்கவேண்டும் என்றும் கூறியிருந்ததை எனது கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
உள்ள+ரில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பாரம்பரிய காணிகளில் அல்லது வீடுகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை முன்னைய ஆளுநர் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்ததையும் எனது கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
பிரதமசெயலாளரால்தரப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் இம்மன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்து அவற்றின் பிரதிகளை சபையின் முன் சமர்ப்பிக்கின்றேன்.
எங்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் ரீதியான அல்லது வேறுகாரணங்களுக்கான வேற்றுமைகள் இருப்பினும் வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டிமத்தியானது தனக்குத் தகுந்தவாறுகாரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
வடமாகாண இடம்பெயர்ந்தமக்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்துவருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திக்கு உகந்தமுறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒருசந்தர்ப்பம் இந்தக் காரியத்தால் உருவாகியுள்ளது.
பெயருக்கு வடமாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கி, மத்தியே மேற்படிகாரியங்களைக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. இது வடமாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். எம்மிடம் கேட்காமல் எம்மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொதுமக்களுக்குப் பலபின்விளைவுகளைக் கொண்டுவரக் கூடியது.
இன்று சர்வதேசமட்டத்தில் இடம்பெயர்ந்தமக்கள் சம்பந்தமாகப் பலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பின்ஹெய்ரோகோட்பாடுகளின் படிவெவ்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்தமக்கள் தமது முன்னையபாரம்பரிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த ஐழுஆ (சர்வதேச இடம் பெயர்வுகளுக்கான நிறுவனம்) சர்வதேசநிபுணத்துவப் பிரதிநிதியுடனும் நான் பேசியிருந்தேன். மீள் குடியமர்வுகள் எம்முடன் இணைந்து சர்வதேச கொள்கைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டும் என்ற என் கருத்துக்களை ஐபழச ஊஎநவமழஎளமi என்ற நிபுணர் ஏற்றுக் கொண்டு அவற்றை உறுதிப்படுத்து வதற்காகவே இலங்கை வந்துள்ளதாக அறிவித்தார்.
இந்தத் தருணத்தில் இவ்வாறான மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும், தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்கு உரியது. ஒருபக்கம் சர்வதேசம் பாதிக்கப்பட்டமக்களின் நலநன வலியுறுத்துகிறது. மறுபக்கத்தில் மத்தியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோளாக இருந்துவருகின்றது.
செயலணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதைவிட மத்திய அரசாங்கம் செயலணியை உருவாக்க முன்னர் எம்முடன் பேசியிருக்கவேண்டும். 13வது திருத்தச் சட்டம் வந்தபின் எமக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அல்லது உடன்பட்டவிடயங்களில் மத்தியானது மாகாணத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உதாசீனப்படுத்தியே நடந்து வருகின்றது. இதைநான் பலமுறைமத்திய அரசாங்க அமைச்சர்களுக்கும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறியேவந்துள்ளேன்.
எனவே இத்தருணத்தில் நீங்கள் உங்கள்கருத்துக்களை அவைமுன் வெளியிடுவதாலும் இவற்றைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதாலும் எமது ஆட்சேபணையை நாங்கள் மத்திக்கு எடுத்தியம்ப உதவியாக இருக்கும் என்றமுறையில் இவ் ஆவணங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
- Home
- முக்கிய செய்திகள்
- மத்திய அரசு தமிழ் மக்களை உதாசீனம் செய்கின்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

