பொலிஸாரின் செயற்பாடு குறித்து கஜேந்திரன் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

58 0

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டை குழப்பிய பௌத்த மதகுரு மற்றும் பெரும்பான்மை இன மக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் நேற்று(18.08.2023) இடம்பெற்ற பொங்கல் வழிபாட்டின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொங்கல் நிகழ்வை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுக்கவில்லை. இதிலிருந்தே அவர்கள் பெரும்பான்மை இனத்தவருக்கே ஆதரவாக செயற்படுகின்றனர், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே இருக்கின்றனர் என்பது தெரிகின்றது.

மேலும் தமிழர்களை ஒடுக்கவும் அவர்களின் உரிமைகளை பறிக்கவுமே பொலிஸார் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.