நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை உட்பட இதர பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலர் குழப்பங்களை வீணாக ஏற்படுத்தி, குழுக்களாகவும் தனி நபராகவும் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் 8 பவுண் பெறுமதியான தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் தொடர்ச்சியாக பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் திருடப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன.
எனவே, வீதியோரங்கள், பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரவு, பகல் வேளைகளில் யாராவது நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத் தருமாறு குறித்த பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
மேலும், பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வரும் பட்சத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையம் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

