வெயாங்கொட பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் பலாங்காடைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டார்.
நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா பணத்தினைப் பெற்றுக்கொண்டு நீண்ட காலமாக மீள செலுத்தாத காரணத்தினால் பணம் கொடுத்தவரால் வர்த்தகர் கடத்தப்பட்டார்.
கடத்தலுடன் தொடர்புள்ள நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

