‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை – சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது

213 0
அருண தமித் உதயங்க எனப்படும் பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய காலி – வலஹன்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் உளவு பார்த்த பாணந்துறை பிங்வத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சமயங் உட்பட ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.