நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!

320 0

நான்கு இலங்கையர்கள் மற்றும் நான்கு பிரித்தானியர் உள்ளிட்ட 8 பேரை, கடவுசீட்டு மோசடியி ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகர விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நன்கு இலங்கையர்களும், சட்டவிரோதமாக பெறப்பட்ட இந்திய கடவுசீட்டுகளை பயன்படுத்தி, பிரிட்டனுக்கு முயற்சித்துள்ள நிலையிலும், அவர்களுக்கு உதவி செய்த குற்றத்திற்காக 4 பிரித்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த இலங்கையர்களை தொடர்ச்சியா நன்கு நாட்கள் விசாரணை செய்த நிலையில், இலங்கையை மற்றும் இந்தியாவை சேர்ந்த முகவர்கள் ஊடாக குறித்த நபர்களுக்கான போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக மும்பை விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மோசடியில் ஈடுபட்ட முகவர்களை தேடிவருவதோடு, சுற்றுலா பயண முறையில் இந்தியாவிற்குள் அழைத்துவரப்படும் ஐரோப்பிய நாட்டவர்களின் தகவல்களை பயன்படுத்தி ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, விமான நிலைய காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.