மாணவி மீது தாக்குதல்

209 0

பெந்தோட்டை – வராஹென பிரதேசத்தினை சேர்ந்த உயர் தர மாணவி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள பெண் ஒருவர் மற்றும் 2 ஆண்கள் தொடர்பில் மாணவியின் பெற்றோர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள நபர்களே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி தற்போது நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.