கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் பேருக்கு டெங்கு!

243 0

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் செ.அருட்குமரன் தெரிவித்தார்.

அதில் கிண்ணியாவிலேயே அதிகம் இறப்பு சம்பவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை வரை 2088 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 14 பேர் இறந்துள்ளனர். சன்முக வித்தியாலயத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொற்றுள்ளவர்கள் டெங்கின் தாக்கம் அதிகரித்த பின்னர் வைத்தியமனையை நாடுவதே இதற்கு காரணமாகும்.

இதுவரை கிண்ணியாவில் 911 பேர் பாதிக்கப்ட்டநிலையில் 9 பேர் இறந்தனர்.

அதேவேளை குறிஞ்சாக்கேணிப்பிரிவில் 109 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முன்று பேர் இறந்தனர்.

திருகோணமலை பிரிவில் 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உப்பு வெளி பொதுச்சுகாதார வைத்தியபிரிவில் 266 பேரும், மூதுாரில் 418பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

குச்சவெளியில் 5பேர் இனம்காணப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.

இவ்வாறு பார்கையில் மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறே மட்டக்களப்பில் 900 பேர் வரையில் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கல்முனை பிரிவில் 700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இறப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை கிண்ணியா பிரிவில் தடுப்பு நடவடிக்கைள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

ஆனாலும் பொதுமக்களின் அவதானம் போதுமானதாக இல்லை.

இதில் அவர்கள் பொது இடங்கள் மற்றும் அயல் இடங்களில் அவதானமாக இருந்தால் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் மழையும் டெங்கை ஊக்குவிக்கும் வகையிலேயே பெய்து வருகின்றது. எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இம்மாதத்திலேயே இந்த திடிர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.