மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க அரசாங்கத்தில் நிலையான ஒருவர் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுவே தற்போது நாட்டிற்கு பாரிய குறையாக இருக்கிறது.
சீனாவிற்கு நாட்டை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் தற்போது முழு நாடும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிம்மதியாக உறங்கவும், அச்சமின்றி வீதியில் இறங்கி நடக்கவும் முடிகின்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.