இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது -சுஸ்மா

356 0

இந்திய மீனவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் விசேட அறிக்கையை விடுத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் அவரது அறிக்கை அமைந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையுடன் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மீனவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் தொடர்பில்லை என்று இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பினரும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.