இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை கடத்தியவருக்கு சிறை

246 0

இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கிய ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆறு ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது.

கெப்டன் பரம் என்று அழைக்கப்படும் அப்ராஹாம் லோஹானாபெசி என்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் தொடர்பான விசாரணைகளில் அவர் இலங்கையர் உள்ளிட்ட பலரை நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வதற்கான படகு பயணங்களை ஒழுங்கு செய்தமை உறுதியானது.

இதனை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு 500 மில்லியன் ரூபா அபராதம் விதித்ததுடன், அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் 6 மாத கால சிறை தண்டனையை அனுபவிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது.