தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

265 0

சிறந்த 10 இன்கீழ் தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று இதனை தெரிவித்துள்ளார்.

சிறந்த 10 இன் கீழ் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் ஊடாக அரசாங்கத்துக்கு 131.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் குறித்து மட்டுமே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படாமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்து மூலம் அறிவிக்க உள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்