போரால் பதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

305 0

கடத்தப்பட்டு இறுதி யுத்தத்தில்  சரணடைந்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்  செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும்  உறவுகள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் முல்லைத்திவில் முப்படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இணைந்து தமக்கான நீதி கோரி ஐநா அலுவலகத்துக்கு மனுவொன்றை வழங்கும் முகமாக முல்லைத்தீவில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மகாவித்திலயாத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமானது மாங்குளம் முல்லைத்தீவு வழியாக சென்று  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ள இடத்தை சென்றடைந்துள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்திலீடுபட்டதொடு இறுதியில் முல்லைத்தீவில் ஐநா அலுவலகம் இல்லாததன் காரணமாக பத்துப்பேர் அடங்கிய குழு கிளிநொச்சி சென்று ஐநா அலுவலகத்தில் தமது மனுவை ஒப்படைத்தனர்