வயோதிப பெண் தீயில் சிக்கி உயிரிழப்பு

160 0

பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வீட்டு குப்பைகளை எரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த மரம் ஒன்றில் தீ பரவியுள்ளதை தொடர்ந்து குறித்த தீயை அணைக்க முற்பட்ட போது அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (05) நடைபெறவுள்ளது.