பேராதனை பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் – கைது செய்யப்பட்ட மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

226 0

பகிடிவதை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்ற நீதவான் இந்திக்க அத்தநாயக்க இன்று இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் 8 பேரை பல்கலைக்கழகத்துக்கு வெளியே பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 15 விவசாய பீட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியே, பேராதனை – மெகொட – கல்கமுவ என்ற இடத்திலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த மாணவர்கள் கடந்த மாதம் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.