கப்பத்தை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள கப்பலின் உரிமையாளர்

294 0

எட்டு இலங்கை கப்பல் பணியாளர்களுடன் “ஆரிஸ் 13” என்ற கப்பலை கடத்திய கொள்ளையர்கள் கப்பம் கோரினால் அந்த தொகையை வழங்க குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

துறைமுகம் மற்றும் கடற்படை விவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த கப்பலுக்கு பணியாளர்களை வழங்கிய இலங்கை பிரதிநிதியான டிரோன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை அந்த கொள்ளையர்கள் கப்பம் கோரியதாக உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கப்பலை மீட்கும் முயற்சியில் சோமாலிய படைகள் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.