இந்தியாவில் 4 இலங்கையர்கள் கைது.

230 0
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து லண்டன் செல்ல முயற்சித்த 4 இலங்கையர்கள் உட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஏனைய நான்கு பேரும் பிரித்தானியர்கள் என்றும், அவர்கள் குறித்த இலங்கையர்களுக்கு உதவியளித்தமைக்காக கைதானதாகவும் இந்தியாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மும்பை வானூர்தி நிலையத்தில் வைத்து கைதான அவர்கள் 27 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.