இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமெரிக்க, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கோரியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் மொன்டினேக்ரோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.
இதற்கு இலங்கை அரசாங்கமும் அணுசரவை வழங்க சம்மதித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.