சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் உக்கிர மோதல்

232 0

அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘ஆரிஸ் 13’ என்ற கப்பலை மீட்கும் முயற்சியில் சோமாலிய படைகள் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கரையோர நகரான ஹபோவில் தற்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் மற்றும் படையினர் இடையே உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலுடன் எட்டு இலங்கை கப்பல் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.