பாரிய மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

231 0

குவைட் நாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல பேரிடம் இருந்து பணத்தினை பெற்று, சட்டவிரோதமான முறையில் தொழிலினை முன்னெடுத்து சென்றுள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாரவில பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் வீட்டை பரிசோதனை செய்துள்ள போது அவரது வீட்டில் இருந்து போலியானது என சந்தேகிக்கப்படும் பிறப்புச் சான்றிதழ் உட்பட பல ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.