நீதிமன்றத்திற்கு ஹெரோயினுடன் வந்த இளம் யுவதி கைது

231 0

ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர் வசம் இருந்து 16 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் பேருவளை – மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், எதற்காக அவர் நீதிமன்றத்திற்கு ஹெரோயினை கடத்தி வந்தார் என்பது இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.