பொலிஸ் சார்ஜன்டுக்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்த விவசாயி கைது!

149 0
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு இலஞ்சம்  வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பகொலயாய பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்தேழு வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி   மோட்டார் சைக்கிள்  செலுத்திச்  சென்ற குறித்த நபரை கைது செய்தபோது, தொம்பகஹவெல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் திலகரத்ன  (41840) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்  1,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க  முயற்சித்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.