ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் மீளப் பெற்றுக் கொள்வதற்கு போதுமான முன்னெடுப்புகள்

282 0

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் மீளப் பெற்றுக் கொள்வதற்கு போதுமான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமைத் தூதுவர் டோங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் தமது குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது.

இதன்படி இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியை அரசாங்கம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த விடயம் முழுமையாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தினதும், ஒன்றிய நாடுகளின் அமைச்சர்களினதும் கைகளிலேயே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.