காரைநகரில் கோயில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

244 0
காரைநகரில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தினை மானிப்பாயில் இருந்து இரு வானில் சென்று உடைத்த குற்றச் சாட்டின் பெயரில் மானிப்பாயில் வசிக்கும் 5 பேரும்  இரு வான்களுடன் ஊர்காவற்றுறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரில் உள்ள வைரவர் ஆலயம் தொடர்பில் ஏற்கனவே இருதரப்பினரிடையில்  நிலவிய சர்ச்சை நீதிமன்றில் வழக்கிடப்பட்டு இடப்பட்டு இரண்டு தரப்பும் குறித்த பகுதிக்குள் உட்பிரவேசிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது . இந்த நிலையில் ஒரு தரப்பினர் குறித்த ஆலயத்தின் அருகில் மற்றுமோர் புதிய ஆலயத்தினை அமைத்து முன்னர் இருந்த ஆலயத்தினை   இடித்தழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதான குற்றச் சாட்டிலேயே மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயில் இருந்து காரைநகருக்குச் செல்லப் பயன் படுத்திய வான் என்பவற்றை ஊர்காவற்றுறைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.