மகிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என தகவல்

206 0

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தொகை செலுத்தப்படாமை குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இன்று அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றையதினம் அவரால் முன்னிலையாக முடியாது என்றும், எதிர்வரும் 24ம் திகதி விசாரணை தினத்தை மாற்றுமாறு மகிந்த ராஜபக்ஷவின் தரப்பில் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.