கொரியாவில் பணிபுரியும் ஒருவர், தனது மனைவி மூலம் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம் கொடுத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெபுவன, தொம்பதொட, யதவர பிரதேசங்களைச் சேர்ந்த 22, 25 மற்றும் 45 வயதுடையவர்களும், அயல் பிரதேசத்தில் வசிக்கும் கொரியாவிலிருந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்திய சந்தேக நபரின் மனைவியுமே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

