ஒருவரை தாக்கிக் கொன்று விட்டு குருணாகல் நகருக்குள் நுழைந்த காட்டு யானை!

165 0
குருணாகல் படகமுவ  வனப் பகுதியை  அண்டிய கோவான கிராமத்துக்குள்  காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்து,  கிராமவாசி ஒருவரைக் தாக்கிக் கொன்றுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இப்பாகமுவ கிரிந்திகல்லை பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்கியிருந்த  யானை ஒன்றே இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை  இவ்வாறு தாக்கியுள்ளது.

கோவான விஹாரைக்குச் செல்லும் வீதியில் பயணித்த ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த காட்டு யானை குருநாகல் நகரை வந்தடைந்தடைதாகவும் தெரிவிக்கப்படுகிறது.