சமல் ராஜபக்ஷ மனு தாக்கல் செய்துள்ளார்

218 0

டி.ஏ ராஜபக்ஷ நிதியத்திற்கு 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை மீண்டும் கையேற்பதை தடுக்குமாறு கோரி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எஸ் துரைராஜா முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.