முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு

223 0

பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒளிப்பரப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் விளம்பரங்கள் காரணமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.