பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

251 0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் நாட்காட்டி அச்சிட்டு அரசாங்கத்துக்கு 2 கோடியே 94 லட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பஸில்ராஜபக்ஷ, ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.