தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் – மகிந்த அமரவீர

218 0

எல்லை மீறி இலங்கைக்குள் பிரவேசிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் கடற்றொழில் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வாராந்தம் மூன்று தடவையேனும் தமிழகத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்.

இதனால் வடமாகாணத்தின் கடல்வளம் பாரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

இதனை தடுப்பதற்கு அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதே சிறந்த வழி.

எனவே இந்த கைதுகளும் படகுகளின் பறிமுதல்களும் தொடர்ந்தும் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.