கொழும்பு பகுதியில் சடலம் மீட்பு

237 0

கொழும்பு – ஹூணுப்பிட்டி – பெரஹர மாவத்தைக்கு அருகில் உள்ள வாவி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

80 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.