கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

243 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கப்பலின் உரிமையாளருக்கும் தகவல் வழங்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த, கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது.

துபாய் அரசுக்கு சொந்தமான எரிஸ் 13 (Aris 13) எனும் இந்த கப்பலில் எட்டுப் பேர் அடங்கிய குழு பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த எட்டு ஊழியர்களும் இலங்கையர்கள் என நம்புவதாக, இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது.