முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

227 0

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் முதலாவது குற்றவாளியாக பஷிலின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில், பஷில் ராஜபக்ஷவை விடுவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.