மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலைநிறுத்தம்

240 0

சம்பள நிலுவையை வழங்க கோரி மின்சார சபை ஊழியர்கள் இன்று சட்டப்படி பணியில் ஈடுப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,மின்சார சபையில் பணிப்புரியும் தொழில்நுட்ப உயர் அதிகாரிகளுக்கு சம்பள நிலுவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனினும் சாதாரண ஊழியர்களின் சம்பள நிலுவைக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இதன்காரணமாக போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இதன்பிரகாரம் முதற்கட்டமாக சட்டப்படி பணியில் ஈடுப்படவுள்ளோம். இப்போராட்டத்திற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்போம்.

இந்நிலையில் இன்று மின்சார சபை ஊழியர்கள் சட்டப்படி பணியில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.