மூன்றாம் வருட மாணவர்களை வளாகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்!

161 0
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இரண்டாம் வருட மாணவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (17) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நிலைமை மேலும் உருவாகாமல் தடுக்கும் வகையில், மேற்படி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (18)  விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.