இணையவழி ஊடாக கடவுச்சீட்டு குறித்து வெளியான தகவல்!

80 0

நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களில் 5,294 பேர் ஒரு நாள் சேவைக்கும், 24,285 பேர் பொது சேவைக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
குறித்த முறைமை அமுல்படுத்தப்பட்டமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.