இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் வியாசேஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளது என ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை.
கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறத்தப்பட்டுள்ளது என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

