துப்பாக்கி, கஞ்சாவுடன் இருவர் கைது

67 0

அம்பாலங்கொடை கொடஹேன பகுதியில் இரு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பாதுக்க பகுதியில் கேரள கஞ்சாவுடன் 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.