மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்

293 0

ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (18.03.2017) ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்ற புனித அல்குர் ஆனின் போதனைக்கிணங்க இரத்த தானம் செய்யும் மகோன்னத கடமையை வலியுறுத்தி இந்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண்களும் பெண்களும் இன மத மொழி பேதமின்றி இந்த இடத்திற்கு வருகை தந்து குருதிக் கொடையளிக்கலாம் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மனிதம் நேயம் பேணும் இந்த மகத்தான பணிக்கு அனைவரும் அன்போடு அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.