சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

248 0

சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.03.2017 ஏறாவூர் அல் – மர்கஷுல் இஸ்லாமி தௌஹீத் ஜும்மா பள்ளி வாயலில் மாலை 4.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைப் பணிப்பாளர் ஐ.எல்.எம். றியாஸ் விசேட விழிப்புணர்வு உரையாற்றவுள்ளார்.

இது தாய்மாருக்கும் பெண்களுக்குமாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் பெறுமதிமிக்க இந்த இலவச விழிப்புணர்வுக் கலந்துரையாடலில் அனைத்துப் பெண்களையும் பங்குபற்றுமாறும் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.